இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக அணிகள் இணைய பாஜ கெடு

8/9/2025 4:52:10 PM
சுப்ரீம் கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க முடிவு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: அதிமுகவில் 3 பிரிவுகளாக உள்ள அணிகளில், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய பாஜ கெடு விதித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். ஆனால் சசிகலா தனக்குப் பதில் கட்சியை வழி நடத்த டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். ஆனால் தினகரன் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்ததால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அவரை கட்சியில் ஓரங்கட்டி வைத்தனர்.

இந்தநிலையில், அதிமுகவின் இரு பெரும் அணிகளான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைய இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த குழுவை திடீரென ஓ.பன்னீர்செல்வம் கலைத்தார். இதற்கிடையில், டெல்லி பாஜ தலைவர்களிடம் பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே ஆதரவு இருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு முழுமையான ஆதரவை கொடுக்க ஆரம்பித்ததால், பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு டெல்லியிலும், தமிழகத்திலும் சரியத் தொடங்கியது. இதனால் அணிகள் இணைப்பு குறித்து இரு அணிகளின் தலைவர்களும் தீரவிம் காட்டினர்.

ஆனால் முதல்வர் பதவி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தனக்கு வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டதால் இணைப்பு பேச்சுவார்த்தை முடங்கியநிலையில் இருந்தது. இந்தநிலையில் 2 முறை டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக சென்றனர். ஆனால் இருவரும் பேசவில்லை. இதை கவனித்த பாஜ மேலிடம், தற்போது எடப்பாடி அணிக்குத்தான் செல்வாக்கு உள்ளது. இதனால் பன்னீர்செல்வம் அணி விரைவில் எடப்பாடி அணியுடன் சேர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கான காலக்கெடுவை பாஜ ரகசியமாக பன்னீர்செல்வத்துக்கு தெரிவித்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக இணைப்பு இல்லை என்று பன்னீர்செல்வம் கூறி வந்தாலும், இணைப்பை எப்படி நடத்துவது, என்ன கோரிக்கை வைப்பது என்பது குறித்து தனக்கு நெருக்கமாக உள்ள கே.பி.முனுசாமி, மைத்ரேயன், தனது மகன் ரவீந்திரன் ஆகியோருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியுடன் பன்னீர்செல்வம் இணைப்பு குறித்து நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த இணைப்பு நடைபெறாவிட்டால், பன்னீர்செல்வம் அணியை பாஜவுடன் இணைக்க வேண்டும் என்றும் பாஜ வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் தினகரன், சசிகலா இல்லாத அதிமுகவை உருவாக்க இரு அணியினரும் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வதிடம் பாஜ தலைவர்கள் இந்த முறை வற்புறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • அமைச்சர் செல்லூர் ராஜூவை டிஸ்மிஸ் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு



  • ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்



  • வங்கதேசத்துக்கு தப்ப முயன்றபோது டெல்லியில் தீவிரவாதி கைது



  • மீண்டும் இலங்கை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு



  • அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் பலி: சிறுமி உடலுடன் மக்கள் மறியல்



  • போலீஸ் உடற்தகுதி தேர்வில் முறைகேடு அமைச்சு பணியாளர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்பை 2வது குற்றவாளியாக சேர்க்க போலீசார் முடிவு



  • டாஸ்மாக் அருகே ரத்தகாயங்களுடன் உடல் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி அடித்துக் கொலை



  • ஏற்கனவே பலர் பதவியை தூக்கி எறிந்த நிலையில் டிடிவி.தினகரன் மீண்டும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்



  • திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு: வி.சிறுத்தைகள், புரட்சி பாரதம் கொடி கம்பங்கள் வெட்டி சாய்ப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]