மான்கள் பரிதாப பலி
8/9/2025 2:59:44 PM
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர், பாண்டகப்பாடி, வ.மாவலிங்கை, கை.களத்தூர், காரியானூர், அய்யனார்பாளையம், பில்லங்குளம், மேட்டுப்பாளையம், அரசலூர், குன்னம் தாலுகா சித் தளி, பேரளி, பெரம்பலூர் தாலுகாஇரட்டைமலை சந்து, களரம்பட்டி உள்ளிட்ட வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகளில் அரியவகை புள்ளிமான்கள் உள்ளன. கடும் வறட்சி காரணமாக உணவும், தண்ணீருமின்றி மான்கள் தவித்து வருகின்றன. கடந்த 4 மாதங்களில் மட்டுமே நாய்களால் துரத்தப்பட்டும், கடிபட்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் பலி யாகியுள்ளன. வேப்பூர் அருகேயுள்ள வடக்கலூர் ஊராட்சி, கத் தாழைமேடு கிராமத்திற்குள் தண்ணீருக்காக புகுந்த 2 புள்ளி மான்களை அப்பகுதியி லுள்ள தெருநாய்கள் விரட்டி விரட்டிக் கடித்துள்ளன.
படுகாயமடைந்த 2 மான்களும் அங்கேயே இறந்துபோயின. அங்கு வந்த வனச்சரக அலுவலர் மோகன், வனவர் காசி, வனக்காப்பாளர் ஆணையப்பர் ஆகியோர் கழனிவாசல் கிராமத்திற்குச் சென்று இறந்து கிடந்த மான்களின் சடலத்தைக் கைப்பற்றினர். பிறகு கால்நடை மருத்துவர் கல்பனா பிரேத பரிசோதனை செய்தார். அத்தியூர் கிராமத்திலும் ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் துரத்தியதால் ஒருமான் இறந்தது. இதனை அப்பகுதி கால்நடை மருத்துவர் செல்வக்குமார் பிரேதப்பரிசோதனை செய்தார். பின்னர் 3 மான்களும் சித்தளி வனப்பகுதியில் புதைக்கப்பட்டன.