இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சைக்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் வசதி அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு

8/8/2025 4:49:40 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், நெடுஞ்சாலையில் 50 கிமீ இடைவெளியில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிவேகம், விதிமுறைகளை கடைபிடிக்காதது, மதுகுடித்துவிட்டு வாகன ஓட்டுவது போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த 2015ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துக்களில், 51 ஆயிரத்து 204 பேர் உயிரிழந்துள்ளனர். 1.45 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியோரை காப்பாற்றவும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 50 கிமீ தொலைவில் ஒரு ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்க கிரேன் ஆகியவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், விபத்து நடந்த 10, 15 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மருத்துவ உதவி, மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் விதமாக, அருகேயுள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர விபத்துகளை தடுக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் ரோந்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படுகிறது. போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால், விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • ம.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி



  • சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைச்சர்கள் பயன்பாட்டுக்கு 1000 பேட்டரி கார்கள்: மத்திய அரசு முடிவு



  • உ.பி.யில் 100 குழந்தைகள் பலியான சம்பவம்: நீதி விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு



  • டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு



  • பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு



  • குஜராத்தில் இந்தாண்டு மட்டும் பன்றி காய்ச்சலுக்கு 208 பேர் பலி



  • ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கை தவறு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • எல்லையில் பாக். ராணுவ அத்துமீறல்கள் அதிகரிப்பு: பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்



  • தூய்மை இந்தியா பட்டியலில் திருப்பதிக்கு முதல் இடம்: சந்திரபாபு நாயுடு உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]