இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

3 நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்றதில் மோதல் : கவர்னர், சபாநாயகர் டெல்லியில் முகாம்

7/11/2025 4:10:12 PM
பரிக்கர், வெங்கய்யா நாயுடு பதவி காலி மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா? பீகாரில் சூடு பிடிக்கும் அரசியல் களம் தேஜஸ்வி ராஜினாமா செய்யாவிட்டால் டிஸ்மிஸ்

புதுச்சேரி : புதுவையில் 2016 பொதுத்தேர்தலில் வென்ற காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியமைத்து வருகிறது. இதனிடையே மாநில அரசின் பரிந்தரையின்றி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 23ம்தேதி சாமிநாதன், சங்கர், செல்வகணபதி என்ற 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனிடையே 3 பேர் நியமன எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டது புதுவை அரசிதழில் தலைமை செயலரால் வெளியிடப்பட்ட நிலையில் கவர்னர் கிரண்பேடி ரகசியமாக 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் ஏற்கவில்லை.  அவர்கள் மூவரும் கடந்த வாரம் சட்டசபை செயலரை சந்தித்து தங்களை அங்கீகரித்து சட்டசபையில் இருக்கை, தனி அறை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த சட்டசபை செயலர், இவ்விவகாரத்தில் சபாநாயகர்தான் இறுதி முடிவெடுக்க முடியும் என்றார்.

இதனிடையே கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ் மூலமாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதில், பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் நியமன எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரித்து பணியாற்ற அனுமதிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் வழங்கினார். அதை படித்து பார்த்த சபாநாயகர், கவர்னரின் கடிதத்தை திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். புதுவை சபாநாயகரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் பெரும் குழப்பும் ஏற்பட்டுள்ளது. நாங்கள்தான் நியமன எம்எல்ஏக்கள் என்று கவர்னர் கிரண்பேடியால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நபர்களுக்கு மாற்றாக அதே பெயர் கொண்ட நபர்கள் சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ள நிலையில் கவர்னர் கிரண்பேடி இவ்விவகாரம் தொடர்பாக முறையிட நேற்று டெல்லி விரைந்தார்.

அங்கு முகாமிட்டுள்ள கிரண்பேடி, குடியரசு தலைவரை மட்டுமின்றி மத்திய உள்துறையிடமும் இதுதொடர்பாக முறையிட உள்ளார். இதனிடையே நேற்று மாலை திடீர் பயணமாக சபாநாயகர் வைத்திலிங்கமும் டெல்லி விரைந்துள்ளார். 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் கவர்னரும், சபாநாயகரும் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் புதுவை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

மேலும் சில
  • ‘கள்ளச்சாராயம் பெருகி போச்சு’ டாஸ்மாக் கடை திறக்க கோரி சாராய பாக்கெட்களுடன் மனு



  • கதிராமங்கலத்தில் தொடர்ந்து பதற்றம் 2 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்



  • நடிகர் கமல் குறித்து தமிழக அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசுகின்றனர் : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • சென்னை மாநகரில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு : தொற்றுநோய் பரவும் அபாயம்



  • செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வாலிபர் அடித்து சித்ரவதை : திருவள்ளூர் ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை



  • கல்லூரி மாணவி கடத்தல்? பொன்னேரி அருகே பரபரப்பு



  • தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்



  • என்எல்சி சுரங்கம் முற்றுகை: 500 ஒப்பந்த தொழிலாளர் கைது



  • கடன் தொல்லையால் விரக்தி: 2 மகன்கள் கிணற்றில் தள்ளி கொலை



  • பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்து ஒருவர் பலி: ராணுவ வீரர்கள் விற்றது அம்பலம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]