இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்சியில் காதலி வீட்டில் காதலன் மர்ம சாவு : மறியல்-தடியடி; போலீஸ் மீது கல்வீச்சு

7/11/2025 3:57:39 PM
அண்ணா பல்கலை.யில் இன்ஜினியரிங் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது வேட்டி அணிந்து வந்ததால் ‘மாலில்’ நுழைய சினிமா இயக்குனருக்கு அனுமதி மறுப்பு

திருவெறும்பூர் : திருச்சி வாழவந்தான்கோட்டை பழைய பர்மா காலனியை சேர்ந்த ராஜு மகன் மணிவேல் (21). வெல்டர். இவரும், இதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும்  காதலித்து வந்தனர். இதற்கிடையே மணிவேல் வெளிநாடு சென்றார்.  தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறி காதலி, மணிவேலுக்கு போன் செய்தார். மணிவேல் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தார். காதலிக்கு 23ம் தேதி வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணிவேல் காதலியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். அவர்கள் மறுத்ததுடன் வீட்டை பூட்டிவிட்டு மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தனர். இந்நிலையில், மணிவேல் காதலிக்கு போன் செய்து ‘நான் உன் வீட்டில் தான் இருக்கிறேன். நீ வராவிட்டால் செத்து விடுவேன்’ என கூறியுள்ளார்.  காதலி உடனடியாக தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது அங்கு மணிவேல் தூக்கில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றபோது ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மணிவேலின் பெற்றோர் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, துவாக்குடி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் மனுவை வாங்க மறுத்து நாங்கள் சொல்வதை புகாராக எழுதிக்கொடுத்தால் மனுவை பெற்றுக்கொள்வோம் என்று கூறினர்.

ஆத்திரமடைந்த மணிவேல் உறவினர்கள் நேற்று மாலை  துவாக்குடி- திருநெடுங்குளம் சாலையில் வாழவந்தான்கோட்டையில் சாலைமறியலிலும், பின்னர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் டிஎஸ்பி(பொறுப்பு) புகழேந்தி வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படாததால், அங்கு வந்த அதிவிரைவுப்படையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். பொதுமக்கள் போலீஸ் மீது கல்வீசி தாக்கினர். அங்கு வந்த திருவெறும்பூர் தாசில்தார் ஷோபாவிடம், மணிவேல் சாவுக்கு காரணமான பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி விட்டனர். இரவு 8 மணியளவில் எஸ்பி கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி கூறியதையடுத்து மறியல் முடிவுக்கு வந்தது.

மேலும் சில
  • அண்ணா பல்கலை.யில் இன்ஜினியரிங் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது



  • கொடுங்கையூர் சிப்ஸ் கடையில் பயங்கர தீ சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீயணைப்பு வீரர் உடல் கருகி பலி



  • சிறந்த நடிகர்-நடிகை-படங்களுக்கு 6 ஆண்டுக்கான சினிமா விருது அரசு அறிவிப்பு



  • தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



  • எம்பிபிஎஸ் - மாநில பாடதிட்ட மாணவர்களுக்கான 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து



  • மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி : கோவை ஜி.எச்.சில் 110 பேர் அட்மிட்



  • அதிகாரிகள் சமாதானம் ஏற்க மறுப்பு : நெடுவாசல் போராட்டம் 93வது நாளாக நீடிப்பு



  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் : சேலத்தில் கைதான மாணவி சிறையில் உண்ணாவிரதம்



  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு : புழல், சோழவரம் ஏரிக்கு வரத்து குறைவு



  • நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]