இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஓபிஎஸ் அணியினர் எங்கள் பக்கம் வருவார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

7/11/2025 3:51:38 PM
பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி கூட்ஸ் ரயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு டிரைவர் ஓட்டம் வட மாநிலங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை : ஓபிஎஸ் அணியினர் எங்கள் பக்கம் வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி வணங்கினர். இதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா எப்போதும் மீனவர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். மீனவ சமூக மக்கள் முன்னேற பல திட்டங்களை கொண்டுவந்தார். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அதிக நிதி ஒதுக்கினார். ஜெயலலிதாவின் லட்சியங்கள்தான் எங்கள் எண்ணங்களாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அரசு ஜெயலலிதா வழியில் செயல்படுகிறது.

சட்டமன்றம் நடைபெறுவதால் மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்து இங்கு பேச முடியாது. இடிந்தகரை மீன்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா என ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதன்படி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இடிந்தகரை மீன்கள் வாங்கப்பட்டது. மன அமைதியை பேணிகாக்கும் வகையில் அலங்கார மீன்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘எங்களை பொறுத்தவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கட்சியினரிடையே ஒற்றுமை வேண்டும். அதிமுக 100 ஆண்டு வாழ வேண்டும். ஓபிஎஸ் அணியினர் மீண்டும் எங்கள் பக்கம் வருவார்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை’ என்று ஜெயக்குமார் கூறினார்.

மேலும் சில
  • ஓபிஎஸ் அணியில் இருந்து விலகல் எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்எல்ஏ இணைந்தார்



  • இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தல் 10 கிலோ தங்கம் பறிமுதல்



  • புதுகை, தஞ்சையில் ஆடியில் களைகட்டும் மொய் விருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும்



  • பல்லடத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ₹220 கோடியில் நலத்திட்ட உதவி முதல்வர் எடப்பாடி வழங்குகிறார்



  • சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதியானால் சசிகலாவுக்கு கூடுதல் தண்டனைக்கு வாய்ப்பு



  • நெடுவாசலில் 101வது நாளாக போராட்டம்



  • நள்ளிரவில் பயங்கர தீ 52 வீடுகள் நாசம்: ரூ.1 கோடி சேதம்



  • கொடுங்கையூர் தீ விபத்து : பேக்கரி கடை உரிமையாளரும் உயிரிழந்தார்



  • அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக குடங்களுடன் அல்லாடும் அப்பாவி மக்கள்



  • பல கோடி வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : போலீஸ் ஐஜி மகன் வீட்டில் ஐடி ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]