இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

எதிர்கட்சிகள் கூட்டணியை மீண்டும் புறக்கணிக்க நிதிஷ் முடிவு : லாலு மகன் பதவி பறிப்பு குறித்து ஆலோசனை

7/10/2025 3:29:15 PM
நடிகர் கலாபவன்மணி மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பாட்னா : ஜனாதிபதி தேர்தலையொட்டி எதிர்கட்சி கூட்டணியில் இருந்து மெல்ல விலகி வரும் நிதிஷ்குமார் மீண்டும் எதிர்கட்சிகளின் கூட்டணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். மேலும் சிபிஐ குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லாலு மகன் தேஜஸ்வியின் துணை முதல்வர் பதவியை பறிப்பது குறித்தும் நிதிஷ் ஆலோசித்து வருகிறார். பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜவுக்கு எதிராக நிதிஷ், லாலு, ராகுல் ஆகியோர் அமைத்த மெகா கூட்டணி மகத்தான வெற்றியை தேடித் தந்தது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜ கூட்டணியில் நீடித்து வந்த நிதிஷ்குமார் கடந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜ உறவை முறித்துக் கொண்டார். பீகாரில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை பிடித்துள்ள நிதிஷ்குமாருக்கு பழைய பாஜ பாசம் போகவில்லை.

இந்த சூழலில் ஏற்கனவே ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி மத்திய அரசுக்கு நிதிஷ் ஆதரவு தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த திட்ட மிடட் போதும், நிதிஷ் மீண்டும் பாஜ பக்கம் சாய்ந்தார். நிதிஷ் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஆனால் நிதிஷ் தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இந்த சூழலில் தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் கூடி பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும் எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் லாலு உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அரசு சிபிஐயை ஏவி வருவதை கண்டித்தும், அது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வகுக்க வேண்டிய வியூகம் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.

ஆனால் இந்த கூட்டத்திலும் நிதிஷ் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என தெரிகிறது. ஏற்கனவே பீகாரில் ஆதரவு திரட்ட மீரா குமார் வந்த போது நிதிஷ் தலைநகர் பாட்னாவில் இருந்து தனது சொந்த கிராமம் ராஜகிர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மீரா குமார் டெல்லி திரும்பிய பிறகே நிதிஷ் பாட்னா திரும்பினார். எனவே நாளை டெல்லியில் எதிர்கட்சிகள் ஆலோசிக்க உள்ளநிலையில் பாட்னாவில் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் நிதிஷ் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜேடியூ தலைவர்கள் மற்றும் அவரது கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் சிபிஐ குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லாலு மகன் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியில் நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது. எனவே நிதிஷ்குமாரின் இந்த முடிவானது பீகார் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் தற்போது பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில
  • பாவனா கடத்தல் வழக்கு காங்கிரஸ் எம்எல்ஏ சிக்குகிறார் : தனிப்படை போலீஸ் தீவிரம்



  • ஜெயில் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை



  • துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு நிதிஷ்குமார் ஆதரவு



  • பாவனா வழக்கில் கைதான நடிகர் திலீப் வங்கி கணக்கு முடக்கம்? : கோடிக்கணக்கில் கறுப்புப்பணம் பதுக்கல் அம்பலம்



  • லாலு வெளியேறினால் நிதிஷ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு: பாஜ அறிவிப்பு



  • ஜீப்பில் மனித கேடயமாக கட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு : காஷ்மீர் மனித உரிமை கமிஷன் உத்தரவு ஏற்புடையதல்ல



  • ரூ.9000 கோடி கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கிய மல்லையாவை ஆஜர்படுத்தாதது ஏன்?



  • பாவனா கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப்பை போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு



  • நைஜீரியா வாலிபருக்கு போலி பாஸ்போர்ட் உளவுப்பிரிவு தலைமை காவலர் கைது : இன்ஸ்பெக்டர் தொடர்பு குறித்து விசாரணை



  • அமர்நாத் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]