விராலிமலை அருகே இன்று காலை கார், பஸ் மோதல் : 3 வாலிபர்கள் பலி
7/10/2025 3:26:43 PM
விராலிமலை : திருச்சி ஆழ்வார்தோப்பு ஒத்தப்புறா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர்உசேன் (32), முகமது முஸ்தபா(30), முகமது பைசல்(36), முகமது சபியுல்லா(36). சிவகங்கையை சேர்ந்தவர் முகமது காசிம்(32). 5 பேரும் காரில் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். குற்றால அருவியில் குளித்துவிட்டு நேற்றிரவு அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். காரை சபிபுல்லா ஓட்டினார். இன்று காலை 6 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குறிச்சி கிராமம் பிரிவு ரோடு அருகே வந்தபோது திருச்சியில் இருந்து விராலிமலை சென்ற அரசு டவுன் பஸ், கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் இடிபாட்டுக்குள் சிக்கி முகமது காதர், முகமது காசிம், டிரைவர் சபிபுல்லா ஆகியோர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விராலிமலை இன்ஸ்பெக்டர் செழியன், எஸ்ஐ இசைவாணி மற்றும் போலீசார் அங்கு சென்று இடிபாட்டில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த முகமது முஸ்தபா, முகமது பைசல் ஆகியோரை திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்ைத எஸ்பி செல்வராஜ் பார்வையிட்டார். போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவர் திருச்சி உய்யக்கொண்டான்திருமலையை சேர்ந்த விக்டரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.