இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுக்கடைகள் முன்பு முற்றுகை, மறியல் டாஸ்மாக்குக்கு எதிராக வீறுகொண்ட மக்கள்

7/3/2025 3:13:08 PM
நாளை முதல் பொங்கல் விடுமுறை ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள் சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி அன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுப்பது, ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கடை இதுவரை மூடப்படவில்லை. இந்நிலையில், நேற்று கடையை அகற்றக்கோரி ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.  மாவட்ட செயலாளர் சலோமி தலைமை வகித்தார். டிஎஸ்பி ஆறுமுகம், தாசில்தார் சரவணன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாககடையை அகற்றாவிட்டால், கடையை அடித்து நொறுக்குவோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் திருமயம் அருகே கடியாபட்டி கடைவீதியில் டாஸ்மாக் கடை மூடக்கோரி  200 பெண்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மறியலிலும் இறங்கினர்.  

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பனையூர் ஊராட்சி கீழபள்ளிச்சந்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் 30ம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இதை அகற்றக்கோரி கீழபள்ளிச்சந்தம் கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் முதல் கடை முன்பு உள்ள சாலையில் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். விடிய, விடிய இந்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. போராட்டம் நடக்கும் இடத்திலேயே கிராம மக்கள் சமையல் செய்து சாப்பிட்டு, போராட்டத்தில் பங்கேற்றனர். இன்று 3ம் நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால்  கடை திறக்கப்படவில்லை. அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கரடிகுளம் அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தில் தனியார் வயலில் டாஸ்மாக் கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் கிடைத்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு



  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்



  • இஸ்ரோவின் 100வது செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது



  • ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு 2018 சென்னையில் வரும் 26ம் தேதி 4ம் ஆண்டு ஆணழகன் போட்டி



  • போகி பண்டிகையன்று காற்று மாசை கண்டறிய சென்னையில் 15 இடங்களில் ஆய்வு



  • நாளை முதல் பொங்கல் விடுமுறை ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்



  • சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்



  • பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை பயன்படுத்த விடுமுறை அறிவிப்பு : அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு



  • அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு ஆர்வத்துடன் இளைஞர்கள் முன்பதிவு



  • மன்னர் கோட்டையில் தங்க, வைர, வைடூரியங்கள் புதையலை தேடி 29 நாட்களாக சுரங்கம் தோண்டும் அதிகாரிகள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]