இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்

6/28/2017 3:57:45 PM
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்

திருவனந்தபுரம் : என்னை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று நடிகை பாவனா கூறியுள்ளார். நடிகை பாவனா கடத்தல் விவகாரம் 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பிரபல நடிகர் திலீப் கூறி வந்தாலும், தற்போது நடக்கிற சம்பவங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே சென்று கொண்டிருக்கின்றன. அவர் அளித்த ஒரு பேட்டியில், பாவனாவுக்கும், பல்சர் சுனிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவரும் கோவாவில் ஒரு மாதம் ஒன்றாக இருந்தனர். இந்த பழக்கம் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் நடிகை பாவனா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரியில் எனக்கு எதிராக நடந்த மோசமான சம்பவத்திற்கு பின்னர் நான் இதுவரை உங்களிடம் (பத்திரிகை) எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் எதையும் வெளிப்படையாக கூற வேண்டாம் என்று என்னிடம்  கூறியதால் தான், நான் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன்.

இப்போது பத்திரிகைகளில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் நான் சமரசம் செய்து கொண்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அது உண்மை அல்ல என்று இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் வாழ்க்கையை சீரழித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பலரது பெயர்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் மூலம் தான், நான் அந்த பெயர்களை தெரிந்து கொண்டுள்ளேன். யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றோ, காப்பாற்ற வேண்டும் என்றோ விசாரணை அதிகாரிகளிடம் நான் எதையும் கூற வில்லை. இந்த வழக்கில் நான் யாருடைய பெயரையும் தெரிவிக்கவில்லை. தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சிலரது பெயர்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை. அதேபோல் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதற்கான ஆதரங்களும் என்னிடம் இல்லை.

பல்சர் சுனிலுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று ஒரு நடிகர் கூறியது மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. எனக்கு எதிராக. இதுபோன்ற உண்மை இல்லாத தகவல்களை கூறினால் நான் சட்டபடி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன். இவ்வாறு பாவனா கூறினார். நடிகர் திலீப் மன்னிப்பு இது தொடர்பாக திலீப் கூறியதாவது: நடிகை பாவனா குறித்து தான் கூறிய கருத்துக்கள், அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சில தீய சக்திகளின் கொடுமைக்கு ஆளான நடிகையை வேண்டுமென்று அவமானம் செய்யும் நோக்கில் நான் எதையும் கூறவில்லை. அந்த நடிகை அனுபவித்த வேதனைகளில் மனதால் நான் அவருடன் ஒன்றாக இருக்கிறேன். நான் கூறியது அவரை வேதனைப்படுத்தி இருந்தால் வாபஸ் பெற்று கொள்கிறேன் என்றார்.

மேலும் சில
  • செங்கல்பட்டு அருகே சோகம் பைக் மீது லாரி மோதல் 2 எஸ்ஐ பரிதாப சாவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது



  • கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 4ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு



  • மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி 30 அடி பள்ளத்தில் இறங்கிய வேன்: 10 ஐயப்ப பக்தர்கள் காயம்



  • 2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக அணி வலுப்பெறும்: திருமாவளவன் பேட்டி



  • ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு வரக்காரணம் என்ன?: அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரி கேள்வி



  • கழிவு நீர் டேங்க் சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: கோவையில் இன்று பரிதாபம்



  • கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • ஜெ. சிகிச்சை முழு வீடியோ வெளியிட மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்



  • மதுரை, சிவகங்கையில் ஆய்வு மேற்கொள்ளவில்லை எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் கவர்னர் பின்வாங்கினாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]