இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செத்தாலும் தண்ணீர் இல்லை நீரை விலைக்கு வாங்கி நீத்தார் கடன்: சங்கரன்கோவிலில் அவலம்

6/23/2017 3:31:07 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இடுகாட்டில் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி இறுதிக்கடன் சம்பிரதாயங்களுக்கு பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வாழும்போதுதான் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், செத்த பிறகு மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யும்போது கூட தண்ணீர் இன்றி அவதிப்படும் அவலம் உள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இதன் அருகே தெப்பக்குளம், குடிநீர் தொட்டி எல்லாம் இருக்கிறது. ஆனால் தண்ணீர்தான் இல்லை. இங்கு இறுதிச் சடங்கு செய்ய வருபவர்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர்.  சங்கரன்கோவிலில் இருந்து நெடுங்குளம் செல்லும் வழியில் இந்த மயானம் உள்ளது. அப்பகுதியிலேயே இது பெரிய மயானம் என்பதால் அக்காலத்திலேயே அருகில் தெப்பக்குளம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். பின்னர் உள்ளாட்சி சார்பில் மேல் மட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் அமைத்துள்ளனர். நீண்ட காலமாக தெப்பக்குளம் தூர்ந்து கிடக்கின்றது. அதை குப்பை கிடங்காக பயன்படுத்துகின்றனர்.

மேல்மட்ட நீர்த்தேக்கத்தொட்டி வறண்டு வெடித்துள்ளது, அதன் கீழ் நீரேற்று இயந்திரமுள்ள அறை பூட்டியே கிடக்கிறது. பூட்டு துருப்பிடித்துள்ளது. இறுதிச் சடங்கு செய்ய வருபவர்கள், நீர்க்குடம் எடுக்கவும், வாரிசுகள் நீர்ப்பந்தல் பிடிக்கவும், தலை நீராட்டவும் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் குளிக்கவும் முடியவில்லை. எனவே, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் இறுதி காரியங்களுக்காக ஒரு டிராக்டர் குடிநீராவது விலைக்கு வாங்கவேண்டியுள்ளது. இதற்காக தண்ணீர், டிராக்டர் வாடகை என ரூ.1000 வரை செலவாகிறது. அருகில் ஒரு போர் உள்ளது. அதை சிறிது ஆழப்படுத்தினால் நிச்சயம் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை என மக்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.

மேலும் சில
  • மதுராந்தகம் அருகே நல்லூரில் ஏரி மதகு உடைந்து நெற்பயிர்கள் நாசம்



  • சசிகலா உறவினர் வீடுகளில் 4வது நாளாக சோதனை பல ஆயிரம் கோடி வெளிநாடுகளில் முதலீடு



  • காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழக கடலோர பகுதிகளில் 5 நாள் பலத்த மழை பெய்யும்



  • சசிகலா உறவினர் வீடு, ஆபீஸ்களில் 3வது நாளாக ரெய்டு : ரூ.1200 கோடி முதலீடு கண்டுபிடிப்பு



  • கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்



  • தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பி.கள் திடீர் பணியிடமாற்றம்



  • டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பரிதாப பலி



  • மணல் கொள்ளை தடுக்க கோரி போராட்டம்: காரணோடை மக்கள் முடிவு



  • திருச்சியில் டாக்டர் சிவக்குமார், இளவரசி சம்பந்தி வீடுகளில் சோதனை நிறைவு: முக்கிய ஆவணங்கள் சிக்கின



  • மன்னார்குடி, தஞ்சையில் 2ம் நாளாக ரெய்டு: திவாகரன் கல்லூரியில் ரூ.25 லட்சம் சிக்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]