இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை

6/23/2017 3:26:06 PM
தூய்மை பணிகள் குறித்து 4,000 நகரங்களில் ஆய்வு 2017 விடைபெற்று 2018 பிறந்தது: புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு, புது நகர் அருகே தனியார் சிமென்ட் தொழிற்சாலை காம்பவுன்ட் அருகே உள்ள முட்புதரில் இன்று மதியம் 11 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் சடலம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபரின் சடலத்தை போலீசார் சோதனை செய்ததில், அவரது கை மற்றும் உடல் பகுதியில் பச்சை குத்திய இடங்களில் எல்லாம் தீயினால் சூடு வைத்து அழிக்கப்பட்டு இருந்தது. முட்புதரில் ரத்த வெள்ளம் காய்ந்த நிலையில் கிடந்தது. மேலும், அவர் கத்தியால் கழுத்தில் கொடூரமாக அறுக்கப்பட்ட நிலையில், தலை தனியே தொங்கியது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களும் ரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டன. அந்த வாலிபர் சிமென்ட் கலர் பேன்ட்டும், சந்தன கலர் சட்டையும் அணிந்துள்ளார். அவரை மினி லாரியில் ஏற்றி வந்த அடையாளங்கள் உடலில் ஆங்காங்கே காணப்பட்டன. அவரை வேறு எங்கேனும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வேனில் ஏற்றி வந்து இங்கு போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]