சொக்கநாதர் கோயில் கருவறையில் திடீர் சப்தம்: பக்தர்கள் அதிர்ச்சி
6/16/2017 5:22:35 PM
நெல்லை: நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் உள்ள சொக்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் சொக்கநாதர், மீனாட்சியம்மன், விநாயகர், முருகன் உள்பட பல்வேறு தெய்வங்களை பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆனி மாதப்பிறப்பையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்றிரவு 7 மணியளவில் பெண்கள் திரளாக வந்து சொக்கநாதரை வழிப்பட்டனர்.
பட்டர் கிருஷ்ணகுமார் பிரகாரத்தில் உள்ள தட்சணாமூர்த்திக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது கோயில் மூலவர் கருவறையில் இருந்து திடீரென ‘ஓம் நமச்சிவாய’ என்னும் சப்தம் எழுந்தது. கருவறையில் யாரும் இல்லாத நிலையில் பக்தர்கள் அதிர்ச்சி கலந்து ஆச்சரியம் அடைந்தனர்.