காரில் கடத்திய செம்மரம் பறிமுதல்
6/14/2017 4:11:59 PM
கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல்-சென்னை செல்லும் சாலையில் கவரப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, பிராட்வே பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் (28), வியாசர்பாடி, சர்மா நகரை சேர்ந்த அசாருதீன் (27) ஆகியோர் ஆந்திராவில் இருந்து காரில் வந்தனர். அவர்களது காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரின் பின்பக்கம் 5 துண்டுகளாக 250 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், ஜாபர் சாதிக், அசாருதீனையும் கவரப்பேட்டை காவல் நிலையம் கொண்டு விசாரித்தனர்.
சத்தியவேடு பகுதியில் இருந்து பூந்தமல்லி பகுதிக்கு செம்மரக்கட்டை கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செம்மரக் கட்டை கடத்தல் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார், யார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.