பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்
6/14/2017 4:09:18 PM
பூந்தமல்லி: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார், கமலேஷ், ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, ஜனார்த்தனன், வெங்கடேசன், இளையான், சங்கர், சுமதி குமார், பாஸ்கர், முத்தமிழ்செல்வன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர். கே.ஜி.ஆர்.சங்கர் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சி சிவா பேசுகையில், ‘மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மண்டியிட்டு கிடக்கிறார். அரசு செய்ய வேண்டிய வேலைகளை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்’ என்றார். விழாவில் நலிவுற்றவர்களுக்கு தையல் இயந்திரங்கள், 3 சக்கர சைக்கிள், இலவச புடவைகள் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்கினர்.
கூட்டத்தில், நிர்வாகிகள் சி.ஜெரால்டு, கே.திராவிடபக்தன், ஆதிசேஷன், காயத்ரி ஸ்ரீதரன், ஜெ.ரமேஷ் மற்றும் பாலமுருகன், ஜெயராமன், உத்தமன், குட்டியா, தனம், ஞானமூர்த்தி, பொன்னுவேல், வேதகிரி, ராஜ்குமார், ஸ்டாலின், கன்னியப்பன், தினேஷ் பாபு, ஜெயக்குமார், தியாகு, மதன், தமிழரசன், சுப்பையா, நடேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.