இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பேய் பிடித்ததாக கூறி சாணத்தை தின்ன வைத்து கல்லூரி மாணவி சித்ரவதை: மகாராஷ்டிராவில் நடந்த அவலம்

6/14/2017 3:45:52 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவிக்கு பேய் பிடித்திருப்பதால் அதை விரட்டுவதற்காக சாணத்தை தின்ன வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர் மாவட்டத்தில் சக்கூர் என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் அவருக்கு பேய் பிடித்துள்ளதாக கருதி அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சிலர், அந்த பெண்ணை உள்ளூரில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர். அந்த  மாணவி எவ்வளவோ மன்றாடியும் தந்தையும் உறவினர்களும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயாராக இல்லை.

இதையடுத்து மந்திரவாதி உள்ளிட்ட 6 பேர் பேய் விரட்டுவதாக கூறி அந்த பெண்ணை அடித்து உதைத்தனர். பின்னர் பேய் விரட்டுவதற்காக சாணத்தை தின்ன வைத்து மந்திரவாதி கொடுமைப்படுத்தியுள்ளான். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணையும் இவ்வாறு அடித்து கொடுமைப்படுத்தி சாணத்தை தின்ன செய்துள்ளனர்.இதையடுத்து இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தந்தை, மந்திரவாதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கர்நாடகாவுக்கு தப்பி ஓடிய மந்திரவாதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் உறவினரான வயதான மூதாட்டி ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் சில
  • பிரதமர் ஆபீசில் திடீர் தீ விபத்து



  • சபரிமலை புதிய மேல்சாந்தியாக உண்ணிகிருஷ்ணன் தேர்வு: ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை



  • என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்தது: குஜராத்தில் மோடி பேச்சு



  • இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல்



  • பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு



  • 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலையே செய்வதில்லை : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு



  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]