மகள் பலாத்காரம் கொடூர தந்தை கைது
6/14/2017 3:25:24 PM
மணப்பாறை: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(40). 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கரும்பு வெட்டும் தொழிலாளியான நாகராஜ் பல ஊர்களில் குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்வார். தங்கள் குழந்தைகளை மாமியார்வீடு உள்ள மணப்பாறை அருகே ெதாட்டியப்பட்டி பள்ளியில் சேர்க்க நாகராஜ் நினைத்தார்.
இதற்காக மூத்த மகள் படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் வாங்க பழனி செல்வதாக அவரை அழைத்துக்கொண்டு நாகராஜ் மணப்பாறை லாட்ஜில் தங்கினார். சிறிது நேரத்தில் அறையில் இருந்து மகள் அலறியபடி வெளியேறினார். இதை கேட்டு சிறுமியிடம் விசாரித்தபோது மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவரவே மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து சிறுமிைய மீட்டனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிந்து நாகராஜை கைதுசெய்தார்.