திருமணம் நிச்சயித்த பெண் கடத்தல்? : போலீசார் விசாரணை
6/14/2017 3:12:38 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீரென மாயமானதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அவர் கடத்தப்பட்டாரா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.திருவள்ளூர் அடுத்த சேலை காலனியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் பிரவீனா (22). இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற பிரவீனா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை விஜயன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனாவை யாராவது கடத்தி சென்றார்களா, வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.