இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் 18 பவுன் பறிப்பு : மூதாட்டியை தாக்கி 5 பவுன் திருட்டு

6/14/2017 3:09:31 PM
காஷ்மீரில் பாகிஸ்தான் சதிச்செயல்கள் முறியடிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு 4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்: நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் தகவல்

தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகர் அப்பு செட்டி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (32). இவரது மனைவி ராஜேஸ்வரி (27). இவர்கள், நேற்றிரவு பாரிமுனையில் பொருட்கள் வாங்கிவிட்டு, வால்டாக்ஸ் சாலை ராசப்ப செட்டி தெரு வழியாக பைக்கில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது 2 மர்ம ஆசாமிகள், பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென சதீஷ் பைக் மீது மர்ம ஆசாமிகள் மோதியதால் சதீஷ், பைக்கை நிறுத்தினார்.அப்போது 2 மர்ம ஆசாமிகளும் ராஜேஸ்வரி அணிந்திருந்த 18 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சென்னை ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (67). இவரது மனைவி ஜெயலட்சுமி (64). இவர், நேற்றிரவு தங்கசாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார்.வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலியை பறிக்க முற்பட்டனர். செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள், ஜெயலட்சுமியை தள்ளிவிட்டனர். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயக்கம் அடைந்தார். இதை பயன்படுத்தி செயினை பறித்து கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வந்து ஜெயலட்சுமியை மீட்டு வண்ணாரப்பேட்டை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் சில
  • வரதட்சணை கொடுமை வழக்கில் 3 பேருக்கு 2 ஆண்டு சிறை



  • பொதுமக்களிடம் ரூ.11 கோடி மோசடி மார்க் கட்டுமான நிறுவன உரிமையாளர் மேலும் 2 வழக்கில் கைது



  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]