இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிங் நாடார் சென்னையில் கைது

6/13/2017 5:12:52 PM
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது ஐ.நா.சபையின் அணு ஆயுத தடைக்கு 50 நாடுகள் ஒப்புதல் : அமெரிக்கா, சீனா எதிர்ப்பு

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிங் நாடார் சென்னையில் துப்பாக்கியுடன் கைதானார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் சியாம்சுந்தர்சிங் என்ற சிங் நாடார்(45). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிங் நாடார் சென்னை வடபழனியில் ஒருவரை மிரட்டியுள்ளார். அந்த புகாரின்பேரில் சிங் நாடாரை வடபழனி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. சிங் நாடாரின் பெயர் சியாம் சுந்தர்சிங் நாடார். அரசியலுக்காக தனது ெபயரை சுருக்கிக் கொண்டார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள இடையன்குளம்.

இவர் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் வசித்து வந்தார். கராத்தே செல்வினின் நெருங்கிய கூட்டாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் களக்காடு அருகே உள்ள கீழ தேவநல்லூரைச்சேர்ந்த முன்னாள் யூனியன் கவுன்சிலர் முருகன் என்பவர் அவரது நண்பர் சொத்து பிரச்னை தொடர்பாக சிங் நாடாரை பார்த்து பேச இடையன்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த சிங் நாடார் காரில் முருகனை கடத்திச் சென்று தேவநல்லூர் பஸ்நிலையத்தில் இறக்கி விட்டதோடு அடித்து உதைத்து தரையில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி விட்டு காரில் தப்பினார்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் சிங் நாடார் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். சிங் நாடார் மீது ஏற்கனவே முன்னீர்பள்ளம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. மேலும் சிதம்பரத்தில் 1999ல் கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கொலையிலும் இவர் மீது வழக்கு உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் துப்பாக்கியுடன் தைாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • தி.மலையில் பல கோடி மதிப்பு சிலைகள் மீட்பு : சிலை கடத்தல் கும்பல் வேலூர் சிறையில் அடைப்பு



  • மதுவிற்ற 2 பெண்கள் கைது : 80 பாட்டில்கள் பறிமுதல்



  • ரயில்வே அதிகாரி செக்ஸ் டார்ச்சர் பெண் கேங்மேன்கள் பகீர் புகார் : விசாரணை நடத்த உத்தரவு



  • 5 கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு: டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க மனு



  • மனைவி, குழந்தை வெட்டி கொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை: நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்



  • செம்மரக்கட்டை கடத்தல் தமிழகத்தை சேர்ந்த 25 பேர் கைது: ஆந்திர போலீஸ் நடவடிக்கை



  • அரசு வேலை வாங்கி தருவதாக 1.08 கோடி மோசடி: பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது



  • லண்டன் பெண்ணிடம் 12 லட்சம் : சாமியாரை பிடிக்க தனிப்படை அமைப்பு



  • சிறுமிபலாத்காரம் பிளஸ் 2 மாணவர் உள்பட 3 பேர் கைது



  • கடன் வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்தவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]