பல்லாவரம் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய 3 சிறுவர்கள் கைது
6/13/2017 4:49:42 PM
பல்லாவரம்: பல்லாவரம் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த சிறுவர்களை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்களை சிறுவர்கள் சீர்சிருத்த பள்ளியில் சேர்த்தனர்.சென்னை பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நேற்று அதிகாலை பல்லாவரம் பாரதிநகர் பகுதியில் உள்ள பால்பூத் கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ₹15,000 திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பல்லாவரம் உதவி ஆணையாளர் விமலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
பின்னர், பால்பூத் மற்றும் எதிரேயுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் பால்பூத் கடையை உடைத்து கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பகலில் கூலி வேலை செய்வதுபோன்று நோட்டமிட்டு இரவில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் இந்த பணத்தில் மது அருந்தி, ஜாலியாக ஊர் சுற்றிவந்துள்ளனர். இவர்கள் மீது பல திருட்டு வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டிலுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.