காஷ்மீர் எல்லையில் இன்று காலை பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்
6/12/2025 5:45:35 PM
ஸ்ரீநகர்:காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய நிலைகளை நோக்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சூழலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இன்று காலை 6.20 மணி அளவில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண காத்தி பகுதியில் தானியங்கி ஆயுதங்களை கொண்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதலே பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.