அனகாபுத்தூரில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு
6/12/2025 3:05:29 PM
பல்லாவரம்: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், குளக்கரை தெருவை சேர்ந்தவர் பிரபு. அப்பகுதி திமுக பிரமுகர். இவரது மனைவி கலைவாணி (34). இவர் நேற்று மாலை காய்கறிகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது ஒரு பைக்கில் மூகமுடி அணிந்து வந்த 2 பேர் கலைவாணியை வழிமறித்தனர்.
பின்னர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க சங்கிலியைப் பறித்தனர். கலைவாணி அலறி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதைப் பார்த்து, முகமூடி கும்பல் பைக்கில் ஏறி தப்பி சென்றது. அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் கலைவாணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்த முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.