இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம்

6/10/2025 6:01:40 PM
திருப்பதி லட்டுக்கு வயசு 77 கர்நாடக சட்ட பேரவை தேர்தல்: பிரசாரத்திற்காக சமூக வலைத்தளத்தை குறிவைக்கும் பாஜ

போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக அமைதி திரும்ப வலியுறுத்தி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று முதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். மத்திய பிரதேசத்தில்  விவசாய கடன் ரத்து கோரி மன்சார் மாவட்டத்தில் கடந்த செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து விவசாயிகளின் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை ராகுல் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சூழலில் மாநிலத்தில் அமைதி திரும்பவும், விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு முன்வர வலியுறுத்தியும் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். போபாலில் உள்ள தசரா மைதானத்தில் உண்ணாவிரதத்தை இன்று காலை 11 மணிக்கு தொடங்கினார். இதற்கு பாஜவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று நிருபர்களை சந்தித்த முதல்வர் சவுகான் கூறுகையில், விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இன்று நேரில் சந்தித்து என்னிடம் குறைகளை கூறலாம். மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளேன் என்றார். மேலும் தனது டுவிட்டரில், மாநிலத்தின் அமைதிக்காக போபாலில் உள்ள தசரா மைதானத்தில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் தாக்கு

ஆனால் முதல்வர் சவுகானின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ அஜஸ் சிங் கூறுகையில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக கோடிக்கணக்கில் செலவழித்து முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார் என்று தாக்கினார். சிபிஎம் தலைவர் பாதல் சரோஜ் கூறுகையில், இது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் வேலை. முதல்வரின் இந்த செயல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வேலையாகும் என்றார்.

மேலும் சில
  • காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி



  • ஆலுவா கிைள சிறையில் திலீப் சொகுசு வாழ்க்கை: ஜாமீனில் வந்த கைதி தகவல்



  • நாட்டுக்காக பணியாற்றுவேன் வெங்கையா நாயுடு பேட்டி



  • திருப்பதி லட்டுக்கு வயசு 77



  • அமேதியில் 1.03 ஹெக்டேர் நிலத்தை ஒப்படைக்க ராஜிவ் அறக்கட்டளைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு



  • பனாமா வழக்கு தீர்ப்பு ஓரு ஜோக்: மக்கள் மன்றத்தில் தீர்வு காண்பேன்: நவாஸ் ஷெரீப் ஆவேசம்



  • கர்நாடக சட்ட பேரவை தேர்தல்: பிரசாரத்திற்காக சமூக வலைத்தளத்தை குறிவைக்கும் பாஜ



  • அரியானாவில் பெண் கடத்தல் : குற்றவாளிகளுக்கு பாஜ அரசு துணை போக வேண்டாம்: ராகுல் தாக்கு



  • நடிகர் அமிர்கான், மனைவி கிரணுக்கு பன்றி காய்ச்சல்



  • காஷ்மீரில் லஸ்கர் தீவிரவாதி சுட்டு கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]