இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்

6/8/2025 3:36:53 PM
திருப்பதி லட்டுக்கு வயசு 77 கர்நாடக சட்ட பேரவை தேர்தல்: பிரசாரத்திற்காக சமூக வலைத்தளத்தை குறிவைக்கும் பாஜ

தென்காசி: கணவன், மனைவியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், சகோதரி 6 பேர் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே கண்ணாடிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ். பால் வியாபாரியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பால் வியாபாரியான சுப்பிரமணியன் என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணியனின் கொலைக்கு தொழில் போட்டியாளரான செல்வராஜ் தான் காரணம் என்று சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரர்கள் கருதினர்.

இதற்கிடையே 2011ம் ஆண்டு மே 19ம் தேதி செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோரை வேனில் வந்த கும்பல் ஒன்று கொலை செய்தது. இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், மாரியம்மாளின் சகோதரர்களான கண்ணாடிகுளத்தை சேர்ந்த மாடசாமி மகன்கள் வெள்ளத்துரை(30), குமார்(33), உடையார்(28), சுப்பிரமணியன்(24), சேகர்(20) மற்றும் சக்திவேல் மகன் மாடசாமி(32), பாளையங்கோட்டையைச் சேர்ந்த டிக்ராஸ் மகன் இளங்கோ(32), கண்ணாடி குளத்தை சேர்ந்த காசி மகன் மணிகண்டன்(30), ஆறுமுகவேல் மகன் நடராஜன்(20) ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஈஸ்வரன் வழக்கில் தொடர்புடைய 10 பேருக்கும் இரண்டு கொலைகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.

மேலும் சில
  • சிறுமிகள் பலாத்கார வழக்கு: 3 ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்மை பரிசோதனை



  • விவசாய கடன் வழங்க லஞ்சம்: அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் டிஸ்மிஸ்



  • ‘அப்பாவை கடைசியாக பார்த்துக்கொள்’ மகளின் கண்முன் தந்தையை கடத்தி கழுத்தை அறுத்து கொடூர கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்



  • வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நிர்வாண ஆசாமி: தி.மலை அருகே நள்ளிரவு பரபரப்பு



  • ‘3வது மனைவியுடன் கள்ளத்தொடர்பு’ மருமகனை கொன்ற மாமனார் பரபரப்பு வாக்குமூலம்



  • தஞ்சை தலைமையாசிரியை கொலை கார் டிரைவர், தம்பதி கைது



  • பெண்ணிடம் செயின் பறிப்பு



  • பெண்ணை கடத்தி திருமணம்: தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது



  • கள்ளக்காதல் விவகாரத்தில் தூத்துக்குடியில் வாலிபர் படுகொலை: கார் டிரைவர் சரண்



  • லஞ்ச வழக்கில் 2 ஆண்டு சிறை இன்ஸ்பெக்டர், எஸ்ஐ டிஸ்மிஸ்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]