இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்

6/8/2025 3:33:48 PM
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: எம்எல்ஏ க.சுந்தர் அழைப்பு டெல்டாவில் இருந்து 5 லட்சம் விவசாயிகள் வெளியேறி உள்ளனர்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் பக்கமுள்ள நாரணம்பாளையம் வரை தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த வண்டியின் டிரைவர் மணிவண்ணன் (33), மாற்று டிரைவர்  முருகன் (35), கண்டக்டர் பெருமாள் (22). இவர்கள் மூவரும் சேர்ந்து, அந்த பஸ்சில் பயணம் செய்த 15 வயது சிறுமியை கடந்த திங்கள்கிழமை இரவு பஸ்சில் வைத்தே பலாத்காரம் செய்தனர். சிறுமி, கதறி அழுதுகொண்டு பஸ்சில் இருந்து இறங்கி வந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேரையும் பிடித்து ஓமலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து டிரைவர்கள் மணிவண்ணன், முருகன், கண்டக்டர் பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கூட்டு பலாத்காரம், போக்ஸோ, கடத்தல், தீண்டாமை வன்கொடுமை உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் அந்த சிறுமியை, கண்டக்டர் பெருமாளுக்கு அறிமுகம் செய்து வைத்த வீராணத்தை சேர்ந்த விஜய் (22) என்ற பஸ் கண்டக்டரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரையும் நேற்று சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 21ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகியோருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பலாத்கார குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தானா? என்பதை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்காக சேலம் மகளிர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். நீதிமன்ற அனுமதி பெற்றவுடன் அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடக்கும்.

அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. தற்போது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மூலமாக அச்சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று சேலம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கின்றனர். அதன்பிறகு அச்சிறுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுமி பாலியல் பலாத்கார வழக்கை விரைந்து முடிக்க சேலம் எஸ்.பி. ராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பஸ்சின் இருக்கையில் சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஆதாரங்களை தடயவியல் நிபுணர் வடிவேல், ஆய்வு செய்து வருகிறார். அதேபோல பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரின் ஆடைகள் சேரிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆதாரங்கள் இருக்கிறது. இதற்கான ஆய்வு சான்றிதழ் கிடைத்தவுடன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றனர்.

மேலும் சில
  • கார் கடத்தல் கும்பலை கோட்டை விட்ட போலீஸ்: தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்



  • அமைச்சர்களின் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ



  • ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஊத்துக்கோட்டை அருகே ஒருவர் கைது



  • தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை



  • பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆசிரியர் சிறையில் அடைப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் கடத்தல் தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • நடிகர் திலீப்பிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள், ஊழியர்கள் மோதல்: வன காப்பாளர் படுகாயம்



  • விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் இருந்து ரவுடி தப்பி ஓட்டம்



  • சென்னை சென்ட்ரலில் வழிப்பறி செய்த 3 போலீசார் கைது: கொள்ளை பொருட்கள் பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]