இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

1000 கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கு சிபிஐ கோர்ட்டில் லாலு பிரசாத் ஆஜர்

6/7/2025 3:59:27 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த 90 களில் நடைபெற்ற ரூ. 1000 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்  நேற்று பாட்னா சிபிஐ கோர்ட்டில் நேரில் ஆஜரானார். பீகார் மாநிலத்தில் கடந்த 95ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் முதல்வராக இருந்தார். அப்போது மாநிலம் முழுவதும்  கால்நடை துறையின் கீழ் வரும் கால்நடை பராமரிப்பு மையங்களில் மாடுகளுக்கு தீவனம் வாங்கியதாக பொய்கணக்கு காட்டி சுமார் ரூ. 1000 கோடி  வரை ஊழல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 96ம் ஆண்டு லாலு உட்பட 44 பேர் மீது சிபிஐ பல்ேவறு வழக்குகள் தொடர்ந்தது. லாலு பிரசாத்  யாதவ் மீது மட்டும் சுமார் 5 வழக்குகள் போடப்பட்டன. அந்த காலகட்டத்தில் பீகார் மாநிலமும் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்றாக இருந்தது. பின்னர்  ஜார்கண்ட் தனியாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் நடைபெற்ற ஊழல்கள் அங்குள்ள ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. இதில் ஒரு  வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சில காலம் சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில்  வெளியில் இருக்கிறார். மாட்டு தீவன வழக்கில் மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவைகள் ஜார்கண்ட் மற்றும்  பீகார் மாநிலத்தில்  விசாரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஒரே குற்றச்சாட்டுக்கு பல்ேவறு வழக்குகள் தொடரப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என லாலு பிரசாத்  யாதவ் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இதர 4 வழக்குகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து சிபிஐ  தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின்னர் எஞ்சிய 4 வழக்கு விசாரணையையும் லாலு சந்திக்க வேண்டும் என  கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது லாலுவுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்  உத்தரவுபடி மாட்டு தீவன ஊழல் வழக்கு நேற்று பாட்னா சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. லாலு பிரசாத் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கு  விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]