இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மதுக்கடையை மூட வலியுறுத்தி குடிமகன்களை அடித்து விரட்டும் போராட்டம்: பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு நாடகம்

6/7/2025 3:41:16 PM
4 நாள் ஸ்டிரைக் வாபஸ், காட்சிகள் இன்று தொடங்கின தியேட்டரில் ரூ.120 டிக்கெட் ரூ.153 ஆக உயர்வு: பேச்சுவார்த்தைக்கு அரசு குழு அமைப்பு குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாவூர்சத்திரம்: டாஸ்மாக் கடையை மூடக்கோரி 6வது நாளாக நடந்த போராட்டத்தில் குடிமகன்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்று பெண்கள் நாடகம் நடத்தினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பணம்பட்டியில் இருந்து ஆவுடையானூர் செல்லும்  சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி, திப்.மீனாட்சிபுரம், கொண்டலூர், பூவனூர்,  ஆரியங்காவூர், நாட்டார்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுக்கடைக்கு அருகில் பந்தல் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். தினமும் பல்வேறு விதமாக போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். 3வது நாளில் சடலம் மாதிரிக்கு பாடை கட்டியும், மதுக்கடை முன்பு கொள்ளிகுடம் உடைத்தும், 4வது நாளில் ஆணுக்கும், ஆணுக்கும்  திருமணம் நடத்தியும், நேற்று முன்தினம் 5வது நாளில் தூக்கு மாட்டியும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நேற்று 6வது நாள் போராட்டத்தில் மதுவுக்கு எதிராக நாடகம் நடத்தப்பட்டது. இதில் ‘வீட்டில் ஒரு பெண் குழந்தை பாடம் படித்துக் கொண்டிருக்கிறது.  அப்போது அங்கு குடிபோதையில் வரும் தந்தை, அந்த குழந்தையிடம் குடிக்க பணம் வேண்டும். அம்மா பணம் வைத்திருக்கும் இடம் உனக்கு தெரியும்.  பணம் எடுத்து வா... என்கிறார். அதற்கு அந்த பெண் குழந்தை பணம் இல்லை என கூறுகிறது. இதனால் தகராறில் ஈடுபட, தனது தந்தையை  குழந்தையே அடிப்பது போன்று நாடகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.அடுத்ததாக, ‘வெளியூரை சேர்ந்த சிலர் இங்குள்ள மதுக்கடை முன்பு மது குடிக்கின்றனர். அவர்கள் போதையில் அவதூறாக பேசிக் கொள்கின்றனர்.  இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பெண்கள் வெகுண்டெழுந்து அவர்களை சரமாரியாக தாக்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது.மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்களே வித்தியாசமான நாடகம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம  மக்களின் நூதன போராட்டம் குறித்து அறிந்தும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சில
  • 4 நாள் ஸ்டிரைக் வாபஸ், காட்சிகள் இன்று தொடங்கின தியேட்டரில் ரூ.120 டிக்கெட் ரூ.153 ஆக உயர்வு: பேச்சுவார்த்தைக்கு அரசு குழு அமைப்பு



  • கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் 9 நாட்களுக்கு பின் இன்று பிலிகுண்டுலுவை வந்தடைந்தது



  • நீதிமன்ற உத்தரவு, வருமான வரித்துறை கடிதம் எதிரொலி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பில் சிக்கல்



  • செங்கல்பட்டு வட்டத்தில் லஞ்சம் வாங்கும் விஏஓ பட்டியல்: துண்டு பிரசுரத்தால் பரபரப்பு



  • இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது



  • குடிநீரில் பெட்ரோல் வாசனை கதிராமங்கலத்தில் மீண்டும் பதற்றம்: பொதுமக்கள் மறியல்



  • மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து



  • கண்டுகொள்ளாத பிரதமர் அணியின் நிலை குறித்து ஓபிஎஸ் அவசர ஆலோசனை: அதிருப்தி தலைவர்களை சரிக்கட்ட முயற்சி



  • மணல் தட்டுபாட்டை கண்டித்து 2 லட்சம் லாரிகள் இன்று ஸ்டிரைக்: கட்டுமான பணிகள் முடங்கின



  • மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சபாநாயகர் தனபால் இன்று அலுவல் பணியை தொடங்கினார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]