இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

6 மாதங்கள் முடிந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் சூழல் ஏற்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

6/7/2025 3:04:30 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, நிர்ணயிக்கப்பட்ட 6 மாத காலம்  நிறைவடைந்தும் தேர்தலை நடத்த முடியவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி காலியானது. மக்கள் பிரதிநிதித்துவ  சட்டத்தின்படி, இடைத்தேர்தலை 6 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி  இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஆளுங்கட்சியான அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இரு அணிகளும் தனித்தனி சின்னங்களுடன் போட்டியிட்டன. இரு  அணியினரும் தீவிர பிரசாரம் செய்தனர். இதற்கிடையே, தொகுதி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக  அதிகளவில் நடந்தது. மேலும் பரிசுப் பொருட்கள், டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை  நடத்திய அதிரடி சோதனையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. உகந்த சூழல் ஏற்படும்போது, ஆர்.கே.நகர் தேர்தல்  நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய 6 மாத கால நிர்ணயம் கடந்த 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுவரை அங்கு தேர்தல்  நடத்தாதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று  தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆர்.கே.நகரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்ததால் தான் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது,  நிர்ணயிக்கப்பட்ட 6 மாத காலம் நிறைவடைந்துள்ள போதிலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்துவதற்கான சூழலில் எந்த முன்னேற்றமும்  ஏற்படவில்லை.

அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்துள்ள  அறிக்கையின்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்  குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று, கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி  உள்ளது.தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான கால சூழல் ஏற்படும் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு  தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்



  • மருத்துவ கல்விக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது : ஜூலை 14ல் தகுதி பட்டியல் வெளியீடு



  • கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி புதுவையில் இன்று முழுஅடைப்பு



  • திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய ‘பி’ அறையை திறக்கவிட மாட்டோம் : மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய வர்மா ஆவேசம்



  • வருகிற 23ம் தேதி பிரணாப்புக்கு எம்பிக்கள் பிரிவு உபசார விருந்து



  • தீவிரவாதி பர்கான் வானி ஓராண்டு நினைவு தினம் முழு அடைப்புக்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு: காஷ்மீர் முழுவதும் போலீசார் உஷார்



  • குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்



  • அடுத்த கல்வி ஆண்டு முதல் 8ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ இனி கிடையாது: மத்திய அமைச்சர் தகவல்



  • ரயில்வே ஓட்டல் டெண்டர் முறைகேடு லாலு குடும்பம் மீது சிபிஐ திடீர் வழக்கு: டெல்லி, பாட்னா உள்பட 12 இடங்களில் ரெய்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]