இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தந்தை, மகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி: ஈரோட்டில் 3 பேர் கைது

6/6/2025 3:49:48 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு பெரியார்நகர் ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (61). இவரது மகள் மதுமதி (33). இவர் இதே பகுதியில் பால்கோவா தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு மதுமதியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்மநபர் பால்கோவா வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மதுமதி பால்கோவா எங்கு வந்து கொடுப்பது என கேட்டுள்ளார். போனில் பேசிய நபர் ஒரு முகவரியை கொடுத்துள்ளார். இதையடுத்து மதுமதி தனது தந்தை வெங்கடாசலத்துடன் பால்கோவாவை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். ஈரோடு ஈவிஎன்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த வெங்கடாசலமும், மதுமதியும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காரில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதையடுத்து மதுமதி செல்போனில் பால்கோவா ஆர்டர் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதனால் மதுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக  பிரபு (28), கோபி (33), வடிவழகன் (29) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மதுமதியின் உறவினரான பிரபு மற்றும் கோபி ஆகியோர் மதுமதியின் பால்கோவா கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு வேலையை விட்டு நின்ற பிரபு தனியாக பால்கோவா கம்பெனி நடத்தி வந்துள்ளார். இதில் தொழில் போட்டி ஏற்பட்டதால், மதுமதியை காரை ஏற்றி கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று பால்கோவா ஆர்டர் கொடுப்பது போல அழைத்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



  • தாழம்பூரில் உறவினரை மிரட்டியவர்களை தட்டி கேட்டவர் கொலை: 4 பேருக்கு வலை



  • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]