இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியை தீக்குளித்து தற்கொலை: சாவில் மர்மம் என தாய் புகார்

6/6/2025 3:48:42 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எடகண்டிகை பகுதியை சேர்ந்தவர் வித்யா (24). இவர் ஆசிரியை. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமார் (எ) ரஜினி (27)க்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வித்யாவுக்கு 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு, இரண்டரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் ராஜ்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வித்யாவின் நகைகளை அடமானம் வைத்து அந்த பணத்தில் மது அருந்தி ஜாலியாக செலவு செய்துவந்ததாக தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வித்யா, தாய் எல்லம்மாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, கணவரும், மாமியாரும் 50 ஆயிரம் கேட்டு, என்னை அடித்து உதைக்கிறார்கள்’ என்று அழுதுள்ளார். அதற்கு எல்லம்மாள், ‘வட்டிக்கு வாங்கியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன், நீ கவலைப்படாதே’ என்று மகளை தேற்றியுள்ளார்.

இந்நிலையில் வித்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக எல்லம்மாளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்து கொண்டு, உறவினர்களுடன்  மகளை பார்க்க சென்றார். வித்யாவின் உடல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டது தெரிந்தது. மருத்துவமனைக்கு சென்ற எல்லம்மாள், மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி ஆரம்பாக்கம் போலீசில் எல்லம்மாள் கொடுத்துள்ள புகாரில், ‘ மகள் வித்யாவின் சாவில் அவரது கணவர் ராஜ்குமார், மாமியார் குமாரிக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • சென்டாக் ஆபீசில் சிபிஐ அதிரடி ரெய்டு : புதுவை அரசு அதிகாரிகள் கலக்கம்



  • மதுக்கடைகள் முற்றுகை தொடர்கிறது தாலிக்கு தங்கம் கொடுத்துவிட்டு மதுவால் தாலியை பறிப்பதா?



  • என்னை சீரழித்தவர்களை விடமாட்டேன் : நடிகை பாவனா ஆதங்கம்



  • மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாரத்தான்



  • முதல்வர் தொடங்கி வைத்தார் மணல் விற்பனைக்கு இணையதளம்



  • ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு 25 லட்சம் விசைத்தறிகள் 2வது நாளாக முடக்கம்



  • மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு போலீஸ் வலை : தட்டி கேட்ட 2 பேருக்கு அடி: 6 பேர் கைது



  • திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் திருமண வரவேற்பு : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு



  • உத்திரமேரூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பை மக்கள் தடுத்ததால் பரபரப்பு



  • தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]