கருணாநிதி பிறந்தநாள் பல்லாவரத்தில் நலத்திட்ட உதவி
6/6/2025 3:48:00 PM
பல்லாவரம்: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 17வது வார்டு பகுதிகளில் கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.கே.கருணாகரன் முன்னிலை வகித்தார். பல்லாவரம் நகர துணை செயலாளர் தாமோதரன், கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசுகையில், ‘ஏழைகளின் நாயகனாக என்றும் திகழ்பவர் கருணாநிதி. ஏழைகள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்களது துயரங்களை துடைத்து தோளோடு தோள் கொடுத்து ஆதரவு கரம் நீட்டுவது திமுக மட்டுமே. திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது’ என்றார். பல்லாவரம் பகுதி 19வது வட்ட செயலாளர் நாகராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானத்தை கருணாகரன் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 38 வது வார்டு பகுதிகளில் மரம் நடுதலின் அவசியத்தை எடுத்து கூறி, அப்பகுதி மக்களுக்கு 100 தென்னங்கன்று இலவசமாக வழங்கப்பட்டன.