இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து ஓபிஎஸ் அணி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை

6/5/2025 3:33:23 PM
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்: ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சென்னை: எம்ஜிஆர்.நகரில் வசித்துவந்த ஓபிஎஸ் அணி நிர்வாகியை 2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து வீட்டுவாசலில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்ஜிஆர். நகர் சூளைப்பள்ளம் அண்ணா தெருவை சேர்ந்தவர் குமார் (என்ற) சின்னக்குமார் (39). இவர் அதிமுக.வில் 137வது வட்ட துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் நிர்வாகியாக பணியாற்றிவந்தார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். இவருக்கும் நண்பர் ஒருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றிரவு 11 மணி அளவில் சின்னக்குமார் வசித்துவரும் 2வது தளத்தில் உள்ள  வீட்டுக்கு 5 பேர் வந்தனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், வீடு புகுந்து சின்னக்குமாரை அடித்து உதைத்து வீட்டிலிருந்து வெளியே இழுத்தனர்.

பின்னர் மாடிப்படி வழியாக தர தரவென இழுத்துவந்து வீட்டு வாசல் முன்பு வைத்து சரிமாரியாக வெட்டினர். கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சின்னக்குமார் துடி துடித்துக் கொண்டிருந்தார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சின்னக்குமாரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சின்னக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எம்ஜிஆர். நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதுபற்றி வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஓபிஎஸ் அணி நிர்வாகி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதால் எம்ஜிஆர். நகர் பகுதியில் பீதி நிலவுகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் சின்னக்குமார் நண்பர் சீனிவாசன் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பறிமுதல்: சென்னையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது



  • காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு



  • தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்



  • பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்



  • உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது



  • விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது



  • வாலிபர் அடித்து கொலை



  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]