படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு
6/3/2025 5:19:09 PM
சென்னை: 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன், 35 வயது நடிகை ஷெர்லியை இன்று காலை திடீர் திருமணம் செய்தார்.நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், காதல் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். தற்போது ‘ஒரு இயக்குன ரின் காதல் டைரி’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை சென்னையில் திரையிடப்பட்டது. முன்னதாக அரங்கிற்கு ேவலு பிரபாகரன் வந்தார். அவருடன் நடிகை ஷெர்லி வந்தார். இவர் வேலுபிரபாகரன் இயக்கிய ‘காதல் அரங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
சிறப்பு காட்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திடீரென்று ஷெர்லியை மணந்துகொள்ளப்போவதாக வேலுபிரபாகரன் அறிவித்தார். அதற்கு ஷெர்லியும் சம்மதம் தெரிவித்தார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். வேலுபிரபாகரனுக்கு 60 வயது ஆகிறது. ஷெர்லிக்கு 35 வயது ஆகிறது. திருமணம்பற்றி வேலுபிரபாகரன் கூறும்போது,’60 வயதாகும் எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப் பட்டது. ஷெர்லியிடம் தெரிவித்தபோது அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். இது நியாயமான முடிவு என்று எனக்கு தோன்றியது. ஷெர்லி சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. முறைப்படி திருமணத்தை பதிவு செய்வேன். அடுத்து கடவுள் 2ம் பாகம் படம் இயக்க உள்ளேன்’ என்றார்.ஷெர்லி கூறும்போது,’காதல் அரங்கம் என்ற படத்தில்தான் நான் நடித்தேன் பிறகு வெளி நாடு சென்றுவிட்டேன். வேலுபிரபாகரனின் நேர்மை எனக்கு பிடித்தது. அவரை மணக்க சம்மதித்தேன். இனி படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார்.