இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

5/30/2017 3:32:35 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

சென்னை: கேரளாவில் இன்று முதல் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தலைநகர் சென்னையில் நேற்று வெப்பச் சலனம் காரணமாக திடீர் மழை  பெய்தது. குறிப்பாக, வடசென்னை வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை  மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, இரவில் குளிர்காற்று வீசியதால் ஓரளவு வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையில், கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,  கேரளாவில் ஒருநாள் முன்னதாக நேற்றே பருவமழை பெய்ய தொடங்கியது. திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை  பெய்து வருகிறது. கேரளாவில் பருவமழை தவறாமல் பெய்யும் பட்சத்தில், அதன் தாக்கமாக தென் மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை,  கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யும் என  அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:தெற்கு அரபி கடல் பகுதியில் ஈரப்பதம் மிகுந்து காணப்படுகிறது. தென்மேற்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் கேரளாவில் இன்று முதல்  தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை உள்மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல்  தென்மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்யும். வங்கக் கடலில் உருவான மோரா புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல்  கரையை கடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது



  • கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • அணி மாறும் மதுரை எம்எல்ஏ? கோயில் விழாவில் எடப்பாடி அணி எம்எல்ஏவுடன் ஆலோசனை



  • சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது : 3வது நாளாக தி.நகரில் போக்குவரத்து மாற்றம்



  • கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு : சென்னையில் நாளை பிரமாண்ட விழா



  • 3 ஆண்டுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணி : 375 போலீசாருக்கு இடமாறுதல்



  • தாய் கண்ணெதிரே கன்டெய்னர் லாரி மோதி இளம்பெண் பரிதாப சாவு



  • அமைச்சர் தரப்புடன் மோதலை தொடர்ந்து பால் முகவர்கள் சங்க தலைவருக்கு ஆவின் உயர் அதிகாரிகள் மிரட்டல்: நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]