இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கோடநாடு கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது: கோத்தகிரியில் ரகசிய இடத்தில் விசாரணை

5/29/2017 3:01:16 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

கோத்தகிரி: கோடநாடு காவலாளி கொலை, கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களாவில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு 2 காரில் புகுந்த கொள்ளையர்கள் காவலாளி ஓம்பகதூரை ெகாலை செய்து விட்டு பணம், நகை, ஆவணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். கொலையாளிகளை பிடிக்க நீலகிரி எஸ்.பி முரளிரம்பா தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய விசாரணையில் 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சந்தோஷ் சாமி (39), தீபு (32), சதீஷன் (42), உதயகுமார்(47), வாளையாரை சேர்ந்த மனோஜ், வயநாடு பகுதியை சேர்ந்த மனோஜ்சமி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியும் ஜெ.கார் டிரைவருமான கனகராஜ் சேலத்தில் நடந்த கார் விபத்தில் பலியானார். இவரது நெருங்கிய கூட்டாளியான சயான் கார் விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இக் கொலையில் தொடர்புடைய 11 வது குற்றவாளியான குட்டி (எ) பிஜினை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தி நேற்று அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து இன்று காலை அவரை கோத்தகிரி அழைத்து வந்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் 10 பேரையும் கைது செய்து விட்டனர். கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியாகி விட்டார். எனவே இத்துடன் இக் கொலை வழக்கை போலீசார் முடித்து விடுவார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை தொடருமா என்பது விரைவில் தெரியும்.

மேலும் சில
  • கிரிக்கெட் விளையாட்டு தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை? : பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரணை



  • ஆம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 14 வயது சிறுமி கர்ப்பம் 60 வயது வியாபாரி கைது: கரு கலைத்த போலி டாக்டர்கள் சிக்கினர்



  • செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் கஞ்சா, அபின் விற்பனை அமோகம்



  • மகேந்திரா சிட்டியில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் அடித்துகொலை? : போலீசில் மனைவி பரபரப்பு புகார்



  • கிரேனில் சிக்கி தொழிலாளி பலி: டிரைவர் கைது



  • ஆழித்தேரோட்ட நெரிசலில் 35 பவுன் நகை பறிப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • பெயிண்டருக்கு சரமாரி அடி



  • வங்கி அதிகாரி வீட்டை உடைத்து 30 பவுன் நகை, பணம் கொள்ளை புரசைவாக்கத்தில் பரபரப்பு



  • பலாத்காரம் செய்து மூதாட்டி கொலை : பேத்தியின் கணவர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]