சானியா ஜோடி தோல்வி
5/24/2017 3:10:11 PM
நர்பங்: நர்பங் கோப்பைக்கான டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில், இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா) -யாரேஸ்லவா ஷெவடோவா (கஜகஸ்தான்) ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. சியா ஜங் (தைவான்)-மிசாகி டோய் (ஜப்பான்) ஜோடியை முதல் சுற்றில் எதிர்கொண்ட சானியா மிர்சா ஜோடி, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் பரிதாபமாக தோல்வியடைந்தது. இந்த போட்டி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடந்தது.