துறையூர் அருகே பக்தர்களுக்கு பிடிக்காசு
5/12/2025 2:55:29 PM
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த முத்தையம்பாளையம் வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு சாமியார் பிடிக்காசுகள் வழங்கினார்.
திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு பிடிக்காசுகள் பெற்றதுடன், கருப்பசாமிக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவுக்காக துறையூரில் இருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.