இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆம் ஆத்மியில் பிளவு; உட்கட்சி விவகாரம் குறித்து வெளியில் பேசக் கூடாது நிர்வாகிகளுக்கு சிசோடியா எச்சரிக்கை

5/2/2025 5:08:55 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசியல் விவகார கமிட்டியில் இருந்து எம்எல்ஏ விலகியதால் கட்சிக்குள் பிளவு மேலும் வலுத்து வருகிறது. இதையடுத்து கட்சி விவகாரத்தை வெளியில் பேசக் கூடாது என சிசோடியா எச்சரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள், டெல்லி இடை தேர்தல், மாநகராட்சி தேர்தல் என ஆம் ஆத்மி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. தோல்விக்கு ஓட்டு இயந்திரத்தில் பாஜ செய்த தில்லுமுல்லு வேலைகள்தான் காரணம் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த சூழலில் அது மட்டுமே காரணமல்ல என ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவர் குமார் விஸ்வாஸ் குற்றம் சாட்டினார்.

மேலும் 30 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற குமார் விஸ்வாஸ் முயற்சிப்தாக செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் பாஜ, ஆர்எஸ்எஸ்சுடன் இணைந்து குமார் விஸ்வாஸ் கட்சிக்குள் பிளவை உருவாக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைது செய்யப்படும் வேளையில், அஜித் தோவால், டெல்லி கமிஷனர் பாஸி ஆகியோருடன் குமார் விஸ்வாஸ் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்றார். இந்த சூழலில் நேற்று ஆம் ஆத்மி அரசியல் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமானத்துல்லா கான் வெளிப்படையாகவே குமார் விஸ்வாஸ் மீது குற்றம் சாட்டினார்.

இதையடுத்து ஆம் ஆத்மி அரசியல் விவகார குழுவில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்தார். அமானத்துல்லாகான் ராஜினாமாவை தொடர்ந்து தலைவர்கள் யாரும் ஆம் ஆத்மி கட்சி விவகாரம் குறித்து ஊடகங்களில் மற்றும் வெளியில் பேச வேண்டாம் என துணை முதல்வர் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நமது ஆட்சி காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அவற்றில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. அரசியல் தலைவர்களின் இது போன்ற சின்னத்தனமான அறிக்கைகளால் ஆட்சியில் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • அந்தமானில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி



  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: ஓபிஎஸ் கோரிக்கை



  • தினகரனுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்



  • உ.பி.யில் பசுவுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : இறந்த மகனை தந்தை தோளில் தூக்கி சென்ற அவலம்



  • டிஎஸ்பி மிரட்டல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி



  • காஷ்மீரில் மீண்டும் பாக். அத்துமீறல்: 48 மணி நேரத்திற்குள் 2வது முறையாக தாக்குதல்



  • ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை



  • உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • செருப்பால் அடிக்க வேண்டும் என அரியானாவில் காங். தலைவர்களை அவமதித்து பேசிய பாஜ எம்பி



  • காஷ்மீரில் பதற்றம் எதிரொலி : அனந்தநாக் இடைதேர்தல் ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]