இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது: மயிலாப்பூரில் பரபரப்பு

4/19/2017 5:11:39 PM
காவல் பதக்கம் பெறுவோர், தீயணைப்பு வீரர்களுக்கு படி உயர்வு உள்பட 54 அறிவிப்புகள் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் : தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை- தனியார் வங்கியில் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் அல்வின் கிறிஸ்டோபர்(40).இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியில் கட்டுவாராம். நேற்று வசூலான ரூ.32 ஆயிரத்தை அந்த வங்கியில் கட்டியுள்ளார். அதில் 13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. அவைகள் ஒரே வரிசை எண்ணில் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், கிறிஸ்டோபரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து வங்கியின் மேலாளர் சத்தியநாராயணன், இதுபற்றி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அல்வின் கிறிஸ்டோபரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டு, கட்டாக கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்ததாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஒரு வாரம் துறைமுகத்தில் உள்ள அனைத்து கன்டெய்னர்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் இல்லை ஆனால் தற்போது வங்கியில் புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பிடிப்பட்டிருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த கள்ள நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • தம்பதியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை



  • வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்



  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]