இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

முகூர்த்த நேரத்தில் விஷம் குடித்தார் அக்கா - மணமகள் ஆனார் தங்கை

3/9/2025 2:20:41 PM
நாளை முதல் பொங்கல் விடுமுறை ஸ்டிரைக்கால் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள் சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்

துறையூர்- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார்(27). பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா(20) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு நேற்று காலை துறையூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. அதைத்தொடர்ந்து ஒரு மண்டபத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நடந்தது. மணப்பெண்ணை அழைத்து வந்தனர். நேற்று காலை மணப்பெண்ணை கோயிலுக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில் அவர் விஷம் குடித்து மயங்கினார். இது குறித்து விசாரித்தபோது அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், தொடர்ந்து படிக்க விரும்பியதாகவும் கூறினார்.

உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் துறையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி மணப்பெண்ணின் தங்கை சங்கீதாவை(18) திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதித்தனர். சங்கீதா இப்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவரிடமும் விருப்பத்தை கேட்டனர். அவரும் சம்மதம்தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பாலகுமாருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் முடிந்ததும் ஆஸ்பத்திரியில்இருந்து சரண்யாவும் கிளம்பி சென்றார். மணமகன் தரப்பினர் போலீசில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டது.

மேலும் சில
  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



  • குடிநீர் கேட்டு மக்கள் மறியல்



  • கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்



  • திருவொற்றியூரில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]