இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக பொதுச் செயலாளரானது செல்லாது சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் மனு - மதுசூதனன் பேட்டி

2/10/2025 5:20:57 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது, அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரி, தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று மதியம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த பேட்டி: கடந்த 1972-ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுக துவங்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர், கட்சியின் சட்டதிட்டங்களை வகுத்தார். கட்சியின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர், கட்சிக் கொடி கட்டும் சாதாரண தொண்டனால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அதிமுக சட்டவிதி 20-ல் தெளிவாக குறிப்பிட வைத்தார். அதுமட்டுமல்லாமல், இந்த கட்சியில் தற்காலிக பொது செயலாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட சசிகலா, கடந்த 2012-ம் ஆண்டு துவக்கத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் மார்ச் 31-ம் தேதியன்று மன்னிப்பு கேட்டு கட்சியில் சேர்ந்தார். அப்போது அவரது கடிதத்தில் ‘‘நான் எந்த அரசியலிலும் ஈடுபட மாட்டேன். தொண்டு செய்யவே வந்துள்ளேன்’’ என்று ஜெயலலிதாவிடம் மன்னிப்பு  கடிதம் எழுதி கொடுத்தார். அவர் கட்சிக்குள் திரும்பி வந்ததே 2012-ல்தான். ஆனால், அதிமுகவில் 5 ஆண்டுகள் கட்சி தொண்டராக இருப்பவரைத்தான் பொது செயலாளராக தேர்ந்தெடுக்க முடியும். எனவே, கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 31-ல் வந்த சசிகலா பொது செயலாளர் பதவிக்கு தகுதியற்றவர். எனவே, அவரை பொது செயலாளராக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று தலைைம தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை பொது செயலாளராக தேர்ந்தெடுத்ததே தவறு. அவரை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு மதுசூதனன் கூறினார்.

மேலும் சில
  • புதுவையில் முதன் முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி



  • சேலம் மாஜி எம்எல்ஏக்கள் 4 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு



  • தமிழகத்தில் அரசியல் நெருக்கடியால் கேரள, கர்நாடக அரசுகள் அத்துமீறல்; பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு



  • கவர்னர் முடிவெடுக்க போதிய அவகாசம் தேவை; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ‘முசிறி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏக்களை காணவில்லை’ முன்னாள் டிஜிபி நட்ராஜை மீட்க கோரிக்கை



  • ரேஷன் கடைகளில் அரிசியை குறைத்து கோதுமை வழங்க நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு



  • சசிகலாவின் முயற்சியை ஜெ ஆன்மா மன்னிக்காது; சங்கரன்கோவில் மாஜி பெண் எம்எல்ஏ ஆவேசம்



  • வங்கி அதிகாரி டார்ச்சரால் விவசாயி தற்கொலை; விவசாயிகள் விஷம் குடிக்கும் போராட்டம்



  • சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி



  • வெளிநாட்டில் பதுங்கியுள்ள காஞ்சி. ரவுடியின் ரூ.21கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]