இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜல்லிக்கட்டு நடக்குமா? எதிர்பார்ப்பில் கிராமங்கள்

1/11/2025 2:59:58 PM
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - சிறப்பு மலர் வெளியிட்டார் சசிகலா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திருச்சி - பொங்கல் பண்டிகைக்கு பிறகு திருச்சி மாவட்டம், சூரியூர், கூத்தப்பார் மற்றும் மணப்பாறை பகுதி கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டும். அருகிலுள்ள புதுகை மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும். உச்சநீதிமன்றத் தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் காளை வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்தினர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வேதனையடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு நடத்த வேண்டும் என்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ‘ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதனை சில அயல்நாட்டு சக்திகள் வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை எந்த வகையிலும் வதை செய்யவில்லை. எந்த இடத்திலும் சட்டத்திற்கு புறம்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை குடும்பத்தில் ஒருவராகவே கருதி பாதுகாத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைபட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் மிகுந்த மன வேதனையடைந்துள்ளனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தாண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள் கிராம மக்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோதிலும், சூரியூர், கூத்தப்பார் உள்ளிட்ட கிராமங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக காளைகள் தயாராகிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • புழல் அருகே பரபரப்பு - தடையை மீறி மாட்டு வண்டி போட்டி



  • ஜல்லிக்கட்டுக்காக போராடுவேன் - விஷால் அறிவிப்பு



  • ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய வேண்டும் - தமாகா, இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்



  • அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - சிறப்பு மலர் வெளியிட்டார் சசிகலா



  • பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை - கேரள அரசை கண்டித்து போராட்டம் வைகோ அறிவிப்பு



  • நடிகர் ரஜினி பாஜவுக்கு வர வேண்டும் - பாஜ இளைஞர் அணி தலைவர் வேண்டுகோள்



  • சென்னை ஏர்போர்ட்டில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு



  • காங்கிரஸ் அழிந்துவிட்டது என்று கூறுவது தவறு - திருநாவுக்கரசர் பேட்டி



  • ‘அரசியலில் நுழைந்து விட்டேன்’ ஜெயலலிதா பிறந்த நாளில் அடுத்த கட்ட அறிவிப்பு - தீபா பரபரப்பு பேட்டி



  • மும்பை செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு - 132 பயணிகள் தவிப்பு



Facebook

Twitter

ஸ்ருதியை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]