சென்னையில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி
12/2/2025 3:18:19 PM
சென்னை, -சென்னை கலெக்டர் மகேஸ்வரி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-1ல் அடங்கியுள்ள 85 காலி பணியிடங்களுக்கு வரும் 19.02.2025 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் 09.12.2025 முதல் நடைபெற உள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்(பொது), 3வது தளம், சாந்தோம், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளதால் விருப்பம் உள்ள குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் உரிய கல்வி சான்றுகளுடன் வரும் 8ம் தேதிக்குள் வேலைநாட்களில் நேரில் தொடர்பு கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து பயன்பெறலாம்.