இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கால்பந்து வீரர்கள் உள்பட 71 பேர் பலி - விபத்தில் சிக்கிய விமானத்தில் எரிபொருள் நிரப்ப முடியாமல் போனது எதனால்?

12/2/2025 3:09:35 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


போகோட்டா: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் சாண்டா குரூஸ் விமான நிலையத்தில் இருந்து, கொலம்பியாவின் மெட்லின் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், மெட்லின் நகருக்கு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த பிரேசில் நாட்டின் சாபோகோயின்ஸ் கால்பந்து கிளப் அணி வீரர்கள் உள்பட மொத்தம் 71 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், எரிபொருள் இல்லாததால் அவசரமாக தரையிறங்க உதவி செய்யும்படி, மெட்லின் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை, விமானத்தின் பைலட் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. எரிபொருள் தீர்ந்ததால், விமானம் விபத்தில் சிக்குவது என்பது மிகவும் அரிதானது. இதை அறிந்த கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 உண்மையில் சாண்டா குரூஸில் இருந்து விமானம் கிளம்பியதும், பொலிவியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோபிஜாவில் மீண்டும் எரிபொருள் நிரப்பி கொள்ளவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே ஒன்றரை மணி நேரம் தாமதம் காரணமாக, கோபிஜாவில் எரிபொருள் நிரப்ப முடியவில்லை. இதனால்தான் சாண்டா குரூஸ்ஸில் இருந்து நேராக மெட்லினுக்கு பறக்க, பைலட் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, எரிபொருளின் அளவு தவறாக கணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய லாமியா விமான நிறுவனத்தின் இயக்க உரிமத்தை பொலிவியா அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கும் முன்பாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என யுஇஎப்ஏ (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்) தெரிவித்துள்ளது. இது குறித்து யுஇஎப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செப்ரின் கூறுகையில், சாபோகோயின்ஸ் கால்பந்து வீரர்களின் மரணம் கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் ஆதரவை வழங்க விரும்புகிறோம். அடுத்த வாரத்தில் நடைபெற உள்ள அனைத்து சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் போட்டிகளுக்கு முன்னதாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்றார்.

மேலும் சில
  • வெளிநாட்டிலும் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி சாத்தியம் - ராகுல் டிராவிட் நம்பிக்கை



  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் - மேக்ஸ்வெல் நம்பிக்கை



  • அஸ்வின் சுழற்பந்து வீச்சாளரான கதை



  • கால்பந்து வீரர்கள் உள்பட 71 பேர் பலி விமானம் விழுந்து நொறுங்கும் முன் பைலட் பேசிய ஆடியோ வெளியானது



  • கிரிக்கெட் வாரியம் - பிராவோ மோதல் முற்றுகிறது



  • ஓய்வு குறித்து முடிவு செய்யவில்லை - பாக். கேப்டன் மிஸ்பா பேட்டி



  • இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா - கேப்டன் கோஹ்லிக்கு கவாஸ்கர் பாராட்டு



  • ஐசிசி டெஸ்ட் தரவரிசை 7 புள்ளிகளை இழந்தது 4வது இடத்தில் பாகிஸ்தான்



  • விமான விபத்தில் 71 பேர் பலி - கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு ; பிரேசிலில் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு கால்பந்து உலகம் இரங்கல்



  • யுவராஜ்சிங் திருமணம் இந்திய வீரர்கள் பங்கேற்பு



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]