இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் கரன்சி பாதிப்பு விவகாரம் - சிறு வணிகர்களிடம் இரவில் குறைகளை கேட்ட ராகுல் ; மார்க்கெட்டுக்கு நடந்து சென்று சந்தித்தார்

11/18/2016 3:30:18 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


புதுடெல்லி, -கரன்சி வாபஸ் அறிவிப்பு காரணமாக டெல்லியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களிடம் நேற்று இரவு ராகுல்காந்தி குறைகளை கேட்டறிந்தார்.கரன்சி வாபஸ் காரணமாக சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வங்கியில் ரூ.500, ரூ.1000 மாற்றுவதில் கெடுபிடி, வங்கியில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு காரணமாக பொருட்களை கொள்முதல் செய்ய இயலாமல் சிறு வணிகர்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் நாடு முழுவதும் சிறு வணிகம், குறுந்தொழில், கைத்தொழில் ஆகியவை முடங்கியுள்ளன.  கரன்சி வாபஸ் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். கரன்சி வாபஸ் அறிவிப்பை திரும்ப பெற மத்திய அரசுக்கு 3 நாள் கெடுவும் விதித்துள்ளனர்.

இந்த சூழலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் நேற்று இரவு 8.45 மணி அளவில் சரோஜினி நகர் மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சிறு வணிகர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் நடந்து சென்ற ராகுல்காந்தி பலரிடம் கரன்சி தட்டுப்பாடால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ராகுல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கருப்பு பணத்தை பதுக்கியுள்ள பணக்காரர்கள் தப்பி வகை செய்துள்ள மத்திய அரசின் இந்த அறிவிப்பால் சிறு வணிகர்கள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • வங்கிகளில் 9 நாளில் ரூ5.44 லட்சம் கோடி டெபாசிட்



  • இரோம் ஷர்மிளா பிரசாரம் துவங்கினார்



  • புலிகள் மரணம் 25% அதிகரிப்பு - மத்திய அமைச்சர் தகவல்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் - மேலும் 10 ஆயிரம் ஏடிஎம் இன்று முதல் இயங்கும்



  • வங்கியில் அதிக பணம் எடுக்க வர்த்தகர்களுக்கு விரைவில் அனுமதி - நிர்மலா சீதாராமன் உறுதி



  • புதிய 2000 ரூபாயிலும் வந்தது கள்ள நோட்டு? - ஒடிசாவில் ரூ4 லட்சம் சிக்கியது



  • கெஜ்ரிவால் தப்பான தகவல் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!



  • புதிய ரூ2000 நோட்டில் வங்க புலி ஏன் இல்லை? - மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்



  • செல்பி உயிரிழப்பு இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]