இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தாராபுரம் அருகே இன்று பயங்கரம் - கார் மீது அரசு பஸ் மோதல் 4 பேர் பரிதாப பலி

11/18/2016 2:47:00 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது

தாராபுரம், -திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடத்தில் இன்று அதிகாலை கார் மீது அரசு பஸ் ேமாதியதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த 4 பேர் காரில்  கோவை சென்றுவிட்டு திரும்பினர். இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல்நிலையம் அருகே  மதுரையிலிருந்து கோவை நோக்கி வந்த அரசுபஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில், காரிலிருந்த சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (42), சரவணன்(41), முருகன்(44), பூவண்ணன்(45) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தீயணைப்பு படையினர் காரில் சிக்கியிருந்த 4 பேரது உடல்களையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டடம் போலீசார் அரசுபஸ் ஓட்டுனர் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான வேலுச்சாமிக்கு, ராஜேஸ்வரி(32) என்ற மனைவியும் ஜீவன், ஜீவா, ஜீவிதா, அஜிதா, அஜித் என்ற 5 குழந்தைகள் உள்ளனர். இதில் ஜீவா என்பவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார். அவரை பார்த்துவிட்டு  திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது. சரவணனுக்கு அழகம்மாள்(30) என்ற மனைவியும், சதா, சரண், சாலினி என்ற 3 குழந்தைகளும், முருகனுக்கு தனலட்சுமி(35) என்ற மனைவியும், தருண் என்ற மகனும், பூவண்ணனுக்கு சோபா (33) என்ற மனைவியும், ஆதி என்ற மகனும் உள்ளனர். விபத்தில் சிக்கிய காரை பூவண்ணன் ஓட்டிவந்தார் என தெரிய வந்துள்ளது.

மேலும் சில
  • ஊதியத்தை ரொக்கமாக தர மறுப்பு - ரிசர்வ் வங்கியை கண்டித்து அரசு ஊழியர் போராட்டம்



  • வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்?



  • கொளத்தூர் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் ஸ்டாலின் சாட்சியம்



  • 3 தொகுதிகளில் வெற்றி சட்டசபையில் அதிமுக பலம் 136 ஆக உயர்வு - தொண்டர்கள் கொண்டாட்டம்



  • புதுவை நெல்லித்தோப்பில் நாராயணசாமி வெற்றி - எம்எல்ஏ ஆனார் முதல்வர்



  • தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் - 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி ; தொண்டர்கள் கொண்டாட்டம்



  • கார் மோதி கொத்தனார் பலி



  • குமரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் ₹700 கோடி டெபாசிட் முடங்கியது - வருமான வரித்துறை சோதனைக்கு வாய்ப்பு



  • ஈரோடு ஜவுளி சந்தையில் 200 கடைகள் மூடல் - ரூபாய் நோட்டு பிரச்னையால் 2வது வாரமாக பாதிப்பு



  • பயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி அதிர்ச்சியில் சாவு - டெல்டாவில் பலி 13 ஆக உயர்வு



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]