‘நண்பன்’ நாயகி இலியானா இந்தியில் ‘பர்பி’ படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்தார். படம் சூப்பர் ஹிட்டானது. ஆனாலும் கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகள் இல்லாமல் கையை பிசைந்துக்கொண்டிருந்தார். தற்போது அக்ஷய்குமார் ஜோடியாக ‘ரஸ்டம்’ படத்தில் நடிக்கிறார். புதிய படம் கைகூடி வந்ததால் சந்தோஷத்தில் இருந்தவர் தற்போது சிலர் கிளப்பிவிட்ட சர்ச்சையால் பயத்தில் இருக்கிறார். ‘அக்ஷய்குமாருடன் நடித்த தென்னிந்திய நாயகிகள் பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறார்கள். நீ உஷாராக இரு’ என்று இலியானா காதில் தோழிகள் ஓதியிருப்பதே பயத்துக்கு காரணம்.பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக அக்ஷய்குமார் திகழ்கிறார். ஆனாலும் அவருடன் ‘கில்லாடி 789’ படத்தில் ஜோடி போட்ட அசின், ‘ஸ்பெஷல் 26’ல் ஜோடி போட்ட காஜல் அகர்வால், ‘பேபி’ படத்தில் ஜோடியாக நடித்த டாப்ஸி மூவருமே கிளிக் ஆகவில்லை. அவர்களைப்போல் தனது நிலையும் ஆகிவிடுமோ என்று சோகத்தில் இருக்கிறாராம் இலியானா.