இந்திய வீரர்களை சீண்டுவோம் ஜான்சன் அடாவடி
எதிரணி வலுவான அடித்தளம் அமைக்கும்போது, பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்ப அவர்களை வார்த்தைகளால் சீண்டுவதில் ஆஸ்திரேலிய அணியினர் வல்லவர்கள். நாளைய போட்டியிலும், இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட காத்திருக்கின்றனர். இதுபற்றி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் கூறுகையில், எதிரணியினரை வார்த்தைகளால் சீண்டுவது விளையாட்டில் ஒரு அங்கம் தான். வார்னர் இந்திய வீரர்களை சீண்டாவிட்டாலும், நான் அந்தபணியை செய்ய தயாராக இருக்கிறேன். அதிவேக பவுன்சர்களை வீசி இந்திய வீரர்களை வீழ்த்துவோம்.