வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது: எச்.ராஜா கண்டனம்
காரைக்குடி: ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிமுகவினர் பேராட்டம் நடந்துவது கண்டிக்கத்தக்கது என பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ஒரு கட்சி தலைமைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் மட்டும் தான். குற்றம் நிருப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இக்கட்சியை புறம் தள்ளுவார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குபின் தமிழகத்தில் நடந்த வன்முறைகள் கண்டிக்கத்தக்கது. தங்கள் உணர்வுகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும். ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. வன்முறைகளை போலீசார் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். தமிழகத்தில் பாஜவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. பெரிய அளவில் அரசியல் மாற்றம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.